குயிலின் கூச்சலில்
திறந்த செவிகளோ
சாலையின் ஒலியில்
செவிகள் அடைத்தன
நிலவின் ஒளியில்
திறந்த கண்களோ
புகைச்சலை பார்த்து
கண்கள் மூடின
பூக்களின் வாசத்தை
நுகர்ந்த நாசியோ
சாக்கடை துர்நாற்றத்தில்
நாசிகள் மூடின
சிறு குழந்தையை பார்த்து
மகிழ்ந்த இதயமோ
கொலையும் கொள்ளையும் பார்த்து
பயந்து துடித்தன...