Saturday, 23 April 2022

எழுத்திக்கொண்டே இருப்போம்

எழுதுவதால் துன்பங்கள் மறைந்து போகும் எனில்

எழுதுவதால் கவலைகள் மறந்து  போகும் எனில்

எடுதுவதால் கனவுகள்              உண்டாகும் எனில் 

அழுவதை விடுத்து எழுதிக்கொண்டே இருப்போம்

எழுத்துக்கள் தீரும் வரை

கற்பனைகள் கரையும் வரை


எழுதிக்கொண்டே இருப்போம்..

Tuesday, 12 April 2022

மழையும் கண்ணீரும்

மழையின் துளிகள் உடலை   

நினைத்தன

நினைந்த உடலோ மனதில்      

குளிர்ந்தன

குளிர்ந்த மனதிலோ கவிதை    

பிறந்தன

பிறந்த கவிதையில் காதல்            

கலந்தன

கலந்த காதலோ கண்ணீராய்    

வடிந்தன

வடிந்த கண்ணீரும் மழையில்      

கலந்திட

மழையின் துளிகளும் கண்ணிரை மறைத்ததே...

Sunday, 3 April 2022

தாய்நாடு

வாழ்வதற்கான நாடு

வளர்வதற்கான நாடு

வாழ்வாதாரத்திற்கான நாடு

வளர்ச்சி கண்ட நாடு

வரச்சி காணா நாடு

என்றும் நம் தாய் நாடே...


தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...