Kavidhaigal
All My Poem are Written with My Pen, But All the lines are made with My Heart
Tuesday, 14 May 2024
தன்மை அறியாமை
Thursday, 25 April 2024
பிடித்தது
நீண்ட சாலைகள் என்னக்கு பிடிக்கும்
உன்னோடு நடக்கயில்
மலர்ந்த பூக்கள் என்னக்கு பிடிக்கும்
உன்னக்காக பரிக்கையில்
கவிதை என்னக்கு பிடிக்கும்
உன்னைப்பற்றி எழுதுகையில்
என்னையும் என்னக்கு பிடிக்கும்
உன்னை நினைக்கையில் ...
புரிதல் வேண்டும்
மேகத்தின் செய்கை புரிந்தால் போதும்
மழையின் வருகை புரிந்துவிடும்
கடலின் செய்கை புரிந்தால் போதும்
அலையின் வருகை புரிந்துவிடும்
காற்றின் செய்கை புரிந்தால் போதும்
சுவாசத்தின் பெருமை புரிந்துவிடும்
வாழ்வின் செய்கை புரிந்தால் போதும்
வாழ்க்கையின் வலிமை புரிந்துவிடும்..
Tuesday, 12 March 2024
என் தனிமை
Monday, 11 March 2024
நீயும் என் கவிதை
கவிதைக்கு பிறந்தவன் நான்
என் தாயும் கவிதைதான்
கவிதையால் பிறந்தவன் நான்
என் தந்தையும் கவிதைதான்
கவிதைக்கு மூத்தவனும் நான்
என் தங்கையும் கூட கவிதைதான்
இருப்பினும்,
கவிதைக்காக பிறந்தவன் நான்
நீயும் என் கவிதை தான்..
Wednesday, 21 February 2024
நீ
கவிதைக்கு வார்த்தையாய்
கவிதையின் பொருளாய்
கவிமேல் உள்ள காதலாய்
என்றும் உன் நினைவுகள்..
பார்த்திடும் பார்வையாய்
பார்க்காத பொழுத்துகளாய்
பார்வையில் ஏக்கமாய்
என்றும் உன் நினைவுகள்..
நகர்ந்து செல்வதுமாய்
நகராத நினைவுகளாய்
நகரந்திடும் காலமாய்
என்றும் உன் நினைவுகள்..
Thursday, 1 February 2024
எல்லாவுமாய் காதல்
அன்னையிடம் அன்பாய்
தந்தையிடம் அறிவாய்இருப்பதும் காதல்
தம்பியிடம் விளையாட்டாய்
தங்கையிடம் கேலியும் காதல்
நண்பனிடம் பேச்சுக்களாய்
நண்பனின் நக்கல்களும் காதல்
மாற்றங்களில் மாறாதிருப்பது
மறதியிலும் மறக்காதிருப்பதும் காதல்
மாற்றத்தால் மாறியிருப்பதும்
மாறாததால் மாறியிருப்பதும் காதல்
கண்களால் கண்டிருப்பதும்
காணாதத்தை கனவில்காண்பதும் காதல்
நினைவில் நிறைந்திருப்பதும்
நினைவாக நிலைத்திருப்பதும் காதல்
பார்க்காத பார்வைக்காகவும்
பாதையை பார்த்திருப்பதும்கூட காதல்
எழுதாத எழுத்துக்களை
எழுத ஏங்குவதும் காதல்
சென்ற பொழுதிலும்
கண்கள் கலங்குவதும் காதல்
மறந்த பொழுதிலும்
நினைவில் வருவதும் காதல்
இல்லாத போதிலும்
அனைவரிடமும் இருப்பதும் காதல் ...
தன்மை அறியாமை
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...
-
குழந்தை போல் உன்னை என் கைகளில் ஏந்திட வேண்டும் உன் தோளுக்கு வலிக்காமல் என் தலை சாய்ந்திட வேண்டும் சாலைகள் நீள உன்கை பிடித்து நடந்திட வேண்டும...
-
என் எழுத்துக்கள் உன்னை சேரவில்லை...✒️ என் வாய்மொழியும் உன்னை சேரவில்லை...🎤 என் என்னத்தில் நீ இருப்பது உன் எண்ணத்திற்கு தெரியவில்லை......
-
மாற்றங்கள் அழகாய் மலர்ந்தபோதும் மலராத என் எண்ணமும் மாற்றத்திற்கு பழகி வாழ்ந்திடும்போது மாறிப்போகும் மாற்ற...