எரியும் தீயின்
ஒளியை பார்த்து
பூரித்தது ஒருபக்கம்
தீயில் கரையும்
மெழுகை போல
உருகியது மறுபக்கம்
எரியும் தீயின் ஒளியோ
கண்ணை பறித்தது
தீயில் கரையும் மெழுகோ
கண்ணை நினைத்தது
உருகும் மெழுகாக
நானும்
நான் தாங்கும் தீயாக
என் கனவும்
இருந்திட ஆசைக்கொண்டேன்
நான் என்னும் மெழுகு
அணையும் வரை
கனவுத்தீ எரிந்திருக்கும்...