நான் என்பது நானாக
நானும் நீயாக
நீ என்பது நீயாக
நீயும் நானாக
நானும் நீயும் நாம் ஆக
நம்மை நாமே ரசித்திடுவோமே...
நான் என்பது நானாக
நானும் நீயாக
நீ என்பது நீயாக
நீயும் நானாக
நானும் நீயும் நாம் ஆக
நம்மை நாமே ரசித்திடுவோமே...
கல்லூரி நினைவுகள்
காணும் காட்சிகளில் காணா கனவுகளையும்
கண்டிடாத காட்சிகளில் கண்ட கனவுகளையும்
கண்டது போல நடித்துக்கொண்டு இருங்கும் காலம் அது
நிறைய கனவுகளும்
நிறைந்த வலிமையும்
நிலைத்த பொறுமையும்
நிறைந்த காலம் அது
சோம்பேறித்தனத்தின் சுகம் கண்ட காலம் அது
சாதிக்க நினைப்பதும்
சண்டைகள் போடுவதும்
சாவடி அடிப்பதும்
சமாதானமாக போவதும்
கலந்த காலம் அது
சண்டைகளில் நட்பை உணர்ந்த காலம் அது
பேசிடலாம் என்று பேசி
பழகிடலாம் என்று பழகி
சிரித்திடலாம் என்று சிரித்து
வாழ்ந்த காலம் அது
சந்தோஷத்தை மட்டும் பெற்று வாழ்த்த காலம் அது
பிரிய நியரும் போது
கண்ணீர் விடாமல் தடுத்து தாங்கி
சிரிப்பில் பிரிந்த
நட்பு அது
கண்ணீரையும் சிரிப்பில் உணர்ந்த காலம் அது
உன்னை மறக்க வேண்டும்
உன்னை மறக்க வேண்டும்
என்று நினைத்திருக்கும்
என் எண்ணமே
உன்னை மறக்க விடாமல்
செய்கிறது...
கவிதை எழுதிட நெஞ்சம் துடிக்குது
ஏனோ வார்த்தைகள்
மறுக்கின்றது
எழுதிய கவிதையின் வார்த்தைகளோ
ஏனோ வலிகளை
தருகின்றது
பார்த்து பார்த்து ரசித்த இடங்களோ
ஏனோ அழகை
மரைக்கிறது
கேட்டக்க விரும்பா பாடல் ஒன்று
ஏனோ காதினிலே
ஒலிக்கிறது
பேச நினைக்க எண்ணியபோது
ஏனோ வார்த்தை
தயங்கியது
பேச வந்த வார்த்தை மட்டும்
ஏனோ மௌனம்
கொள்கிறது...
கவிதை எழுதிட கைகள் துடிக்குது
எழுத முடியாமல் நெஞ்சம் தவிக்குது
எழுத நினைத்த கவிதையோ
உன் திருமணத்திற்கு வாழ்த்துகளாக
மாரிப்போனதே...😢
பயணத்தின் தொடக்கத்தையும் முடிவையும்
இணைப்பது பாதை
தொடங்கிய பொழுது ஆர்வத்தையும்
முடிவில் நல்ல நினைவளிப்பதும் பயணம்
மேடுப்பல்லங்கள் இருப்பினும் மகிழ்ச்சியை
குறைக்காமல் தருவது காட்சிகள்
காணும் காட்சியில் உள்ள ஆபத்தும்
ஆபத்தில் ஒளிந்திருக்கும் அழகும்
அவ்வழகை நெருங்கும் ஆர்வமும்
நெருங்கியதும் கிடைக்கும் ஆனந்தமும்
கிடைத்திருக்கும் பயணத்தின் நேரத்தில்
தோன்றியது இக்கவிதை...
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...