சொல்லிய சொல்லின்
வலியை காட்டினும்
சொல்லாத சொல்லின்
வலியே கொடியது
சொல்லில் முடிந்த
வலியின் வேகமும்
சொல்ல முடியா
வலியின் சோகமும்
சொல்லில் அடங்கா
வலிகளின் எண்ணமும்
சொல்ல சொல்லும்
வரிகளின் வழியே
சொல்லும் சொல்லில்
சொல்லா கனவினை
சொல்லும் பொழுதினில்
நினைவாகி விடுமே....