Wednesday, 9 March 2022

எனக்கு வேண்டியவை

குழந்தை போல் உன்னை என் கைகளில்

ஏந்திட வேண்டும்

உன் தோளுக்கு வலிக்காமல் என் தலை

சாய்ந்திட வேண்டும்

சாலைகள் நீள உன்கை பிடித்து

நடந்திட வேண்டும்

என் வார்த்தைகள் தீரும் வரை உன்னுடன்

பேசிட வேண்டும்

சோகம் நேர்ந்திடும் பொழுது உன்மடி

சாய்ந்திட வேண்டும்

நான் என்றும் கவிதை எழுத உன்னை 

நினைத்திட வேண்டும்

காலம் முழுதும் உன்னை மட்டும்

நினைத்திட வேண்டும்

இறந்தாவது அடுத்த பிறவியில்

சேர்ந்திட வேண்டும்...

4 comments:

Share your feedback to improvised myself

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...