கவிதை எழுதிட நெஞ்சம் துடிக்குது
ஏனோ வார்த்தைகள்
மறுக்கின்றது
எழுதிய கவிதையின் வார்த்தைகளோ
ஏனோ வலிகளை
தருகின்றது
பார்த்து பார்த்து ரசித்த இடங்களோ
ஏனோ அழகை
மரைக்கிறது
கேட்டக்க விரும்பா பாடல் ஒன்று
ஏனோ காதினிலே
ஒலிக்கிறது
பேச நினைக்க எண்ணியபோது
ஏனோ வார்த்தை
தயங்கியது
பேச வந்த வார்த்தை மட்டும்
ஏனோ மௌனம்
கொள்கிறது...
No comments:
Post a Comment
Share your feedback to improvised myself