Tuesday, 3 October 2023

முன்பெல்லாம்

பார்க்காத பாவையின்

பார்வை கிட்டினால்

பாலாய்போன பாதிகாலமும் 

பளிச்சென்று மாறிவிடும்...


பார்வையில் பழகி 

பேசனினைக்கையில் ஊமையாகி 

பேசாமல் சென்று

நினைத்ததை மனதில் வைத்து 

பொய்யாய் காரணம் உரைத்தேன்...



நினைத்ததை நிதானமாய் சொல்லிருந்தால்

நான் நிலையான மனநிலையில்

நின்றிருபேநோ தெரியவில்லை


பார்கும் கண்களும் கண்ணிரில் நினைய

எழுதிய எழுத்துக்களில் கண்ணீர் கரைந்திட 

எழுத்துக்கள் அதில் அழியலாம் 

எழுதிய என் என்னகள் அழிவதில்லை...

No comments:

Post a Comment

Share your feedback to improvised myself

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...