பேசவேண்டிய பொழுதுகளில்
பேசாமல் இருந்து
விழியால் பேசிக்கொண்டோம்
கடிதங்களும், கவிதைகளும்
பல எழுதிக்கொண்டு
மொழியால் பேசிக்கொண்டோம்
வார்த்தைகள் போதாமல்
வரிகளை தீட்டி
இசையால் பேசிக்கொண்டோம்
பேசிக்கொண்டு பேசிக்கொண்டு
பேசிக்கொண்டிருக்கையில்
பேசாமல் இருந்ததேனோ
என் கண்ணாடி பிம்பமே...
No comments:
Post a Comment
Share your feedback to improvised myself