Saturday, 29 October 2022

சொல்லும் கனவும்

சொல்லிய சொல்லின்

                வலியை காட்டினும்

சொல்லாத சொல்லின்

                வலியே கொடியது

சொல்லில் முடிந்த 

                வலியின் வேகமும்

சொல்ல முடியா

               வலியின் சோகமும்

சொல்லில் அடங்கா

                வலிகளின் எண்ணமும்

சொல்ல சொல்லும்

                 வரிகளின் வழியே

சொல்லும் சொல்லில்

                 சொல்லா கனவினை

சொல்லும் பொழுதினில்

                  நினைவாகி விடுமே....


No comments:

Post a Comment

Share your feedback to improvised myself

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...