தூராதே மழையே
தூரிய பொழுதுகளில் நினையா நினைவுகளும்
துளிகளில் தெரிகிறதே...
தூரிடும் மழையே
தூரிடும் பொழுதுகளில் விழுந்திடும் கண்ணீரை
துளிகளும் துடைத்ததே...
தூராதே மழையே
தூங்கிடும் பொழுதுகளில் தூங்காமல் விழித்திடுமே
என் விழியே...
தூரிடும் மழையே
தூரிடும் பொழுதுகளில் மறக்காத நினைவுகளும்
மறந்திடும் துளிகளிலே...
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
ReplyDelete